Press "Enter" to skip to content

சர்ச்சைக்குரிய வகையில் வீரர்கள் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற பண்டேஸ்லிகா கால்பந்து போட்டிகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் ஜெர்மனியில் கடந்த இரண்டு நாட்களாக வெற்றிகரமாக 8 கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மார்ச் 11-ந்தேதிக்குப்பின் ஜெர்மனியில் பண்டேஸ்லிகா கால்பந்து லீக் உள்பட விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் இருந்தன.

ஜெர்மனியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கால்பந்து போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டன.

ரசிகர்கள் மைதானத்திற்குள் வரக்கூடாது, வீரர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கக்கூடாது. எதிரணி வீரர்களுடன் அதிக அளவில் உடல் அளவில் மோதல் சம்பவத்தில் ஈடுபடக்கூடாது போன்றவைகளும் அதில் அடங்கும்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆகிய இரு தினங்களில் 8 போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. ரசிகர்கள் இல்லை. ஆனால் வீரர்கள் தங்களது சந்தோசங்களை வெளிப்படுத்தும்போது வழிமுறைகளை கடைபிடிக்க முடியாமல் போனது.

டார்ட்மண்ட் அணியின் பயிற்சியாளர் லூசியன் ஃபேவ்ரி கூறுகையில் ‘‘ரசிகர்கள் இல்லாமல் போட்டியில் விளையாடியது விசித்திரமாக இருந்தது. ரசிகர்களின் சத்தத்தை கேட்க முடியவில்லை. கோல்கள் நோக்கி பந்தை அடித்த போதும், சிறந்த பாஸ் செய்த போதும், கோல் அடித்த போதும் மைதானம் மைதியாகவே இருந்தது’’ என்றார்.

ஹெர்தா பெர்லின் அணியின் வெடாட் இபிசெவிக் கோல் அடித்த சந்தோசத்தை சக வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் வருந்துகிறேன். ஆனால் நாங்கள் பேரார்வம் கொண்ட கால்பந்து வீரர்கள். ரோபோக்கள் அல்ல.

போட்டி தொடங்குவற்கு முன் எங்கள் அணி டாக்டரிடம் சந்தோசத்தை வெளிப்படுத்தினால் கோல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா? என்று கேட்டார். அவர் ஆமாம் என்று கூறினார். அது எனக்கு முக்கியமான விசயமாக இருந்தது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »