Press "Enter" to skip to content

கேஎல் ராகுல் குறுகிய கால தீர்வு: பார்தீவ் பட்டேல் சொல்கிறார்

கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது குறுகிய கால தீர்வுதான் என்று பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எம்எஸ் டோனிக்குப் பதில் மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் இன்னும் அடையாளம் காணவில்லை. இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ தயார் செய்து வருகிறது.

ஆனால் அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் ரிஷப் பண்ட் அதை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நேரத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகிய இரு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால், டி20 உலக கோப்பை தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரை ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என பார்தீவ் பட்டேலிடம் கேட்கப்பட்டது. அதற்கு கேஎல் ராகுல் குறுகிய கால தீர்வு என்று பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்தீவ் பட்டேல் கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் கேஎல் ராகுல். நீங்கள் உலக கோப்பையை பற்றி சிந்தித்தால் கேஎல் ராகுல் குறுகிய கால தீர்வுகாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். உலக கோப்பையின்போது விக்கெட் கீப்பர் பணியை கேஎல் ராகுல் செய்தால், அதில் எந்தவித சந்தேகமும் இருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் ரிஷப் பண்ட் அவருடன் நிச்சயமாக இருப்பார். நான் ஒவ்வொரு முறையும் ரிஷப் பண்ட்-ஐ சந்திக்கும்போது, உனக்குள் திறமை இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் திறமை இல்லை என்றால் மக்கள் ஒருபோதும் உங்களை பற்றி பேசமாட்டார்கள். அகவே, இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். சில நேரங்களில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்போது, மீண்டும் பார்முக்கு வர முடியும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »