Press "Enter" to skip to content

உடல் தகுதியை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளேன்: ரோகித் சர்மா

பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கிற்கு முன் காயம் ஏற்பட்டதாகவும் தற்போது காயத்தில் இருந்து மீண்டு விட்டாலும், இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் உடல் தகுதியில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதனால் ஒருவார பயிற்சிக்குப் பிறகு உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தாம் உள்ளதாக ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

நியூசிலாந்து தொடரின்போது ரோகித் சர்மா காயம் அடைந்தார். அதன்பின் தற்போது வரை அவர் விளையாடாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »