Press "Enter" to skip to content

வெளிப்புற பயிற்சி: பிசிசிஐ-யின் சம்மதத்திற்காக காத்திருக்கும் இந்திய அணி வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிப்புற பயிற்சியை மேற்கொள்ள பிசிசிஐ-யின் சம்மதத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுமார் 90 நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ரசிகர்கள் இன்றி வெளிப்புற மைதானத்தில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும் இதுவரை பிசிசிஐ வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஜூலை மாதம் இலங்கை சென்று இந்திய அணி விளையாடும் என்று பிசிசிஐ முதலில் அறிவித்தது. இதனால் பயிற்சியை மேற்கொள்ளலாம் என வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே தொடர்களை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதால் வீரர்களை பயிற்சி மேற்கொள்ள வைப்பதில் அவசரம் காட்டாமல் உள்ளது.

இந்நிலையில் வீரர்கள் பியற்சி மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஆனால் பிசிசிஐ-யின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அனுமதி அளித்ததும், ஷர்துல் தாகூர் வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘‘மீண்டும் எங்கள் பழைய பார்முக்கு வர சில நெட் செசன் தேவை. 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும்போது அதை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும்போது சுற்றி சில வீரர்கள் இருப்பார்கள். அதன்பின்தான் பந்தை எதிர்கொள்வோம். இதனால் மனதளவில் வலிமையாக பயிற்சி செசன் முக்கியமானது.

எளிதானது கிடையாது என்றாலும், அதேநேரத்தில் நாங்கள் தொழில்முறை வீரர்கள். நாங்கள் பல ஆண்டுகள் விளையாடி இந்த நிலையை எட்டியுள்ளோம். அதனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நீண்ட காலம் எடுக்காது’’ என்று ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »