Press "Enter" to skip to content

கேப்டன் பதவியில் சாதித்த ராகுல் டிராவிட்டுக்கு நாம் போதிய மதிப்பு கொடுக்கவில்லை: கம்பிர் கவலை

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வென்று சாதனைப் படைத்த ராகுல் டிராவிட்டுக்கு போதிய மதிப்பு கொடுக்கவில்லை என்று கம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். ஏராளமான சாதனைகள் செய்தாலும் ராகுல் டிராவிட்டின் பெயர் வெளியில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி எந்தவொரு இக்கட்டான நிலையில் இருந்தாலும் அதில் இருந்து மீட்கும் வல்லமை பெற்றவர். அதேபோல் பந்தும் வீசுவார். விக்கெட் கீப்பர் பணியையும் செய்வார். இவரை கிரிக்கெட்டின் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம்.

கங்குலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது ராகுல் டிராவிட் கேப்டன் பதவியை ஏற்றார். 2007 உலக கோப்பை தோல்வி, கிரேக் சேப்பல் சொதப்பல் ஆகியவற்றால் ராகுல் டிராவிட்டின் கேப்டன் பதவி பறிபோனது.

இருந்தாலும் 25 டெ்ஸ்ட் மற்றும் 79 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். 8 டெஸ்ட் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இவரது தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனைப் படைத்தது.

மேலும் சேஸிங்கில் 2-வது பேட்டிங் செய்து தொடர்ச்சியாக 17 போட்டிகளில் வெற்றி என்ற சாதனையை உடைத்தது.

என்றாலும் ரசிகர்கள் கங்குலி, எம்எஸ் டோனி, தற்போது விராட் கோலிதான் சிறந்த கேப்டன்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ராகுல் டிராவிட்டிற்கு அந்த மதிப்பு கிடைக்கவில்லை என்று கம்பிர் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘நான் கங்குலி தலைமையின் கீழ் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனேன். ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனேன. ராகுல் டிராட்விட்டின் கேப்டன் பதவிக்கு நாம் போதுமான மதிப்பு கொடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

நாம் சவுரவ் கங்குலி, எம்எஸ் டோனி, தற்போது விராட் கோலி ஆகியோரை மட்டுமே பற்றி பேசி வருகிறோம். ஆனால் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான கேப்டனாக இருந்துள்ளார். அவருடைய சாதனைகள் இருந்தாலும் கூட, சராசரி வீரராகவே கருதப்பட்டார். அதேபோல்தான் கேப்டன் பதவியிலும். நாம் 14 அல்லது 15 போட்டிகளிலேயே வென்றிருக்கும் நிலையில், அவரது தலைமையில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றோம்.

ஒரு கிரிக்கெட்டராக அவரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க கேட்டுக்கொண்டால், களம் இறங்கி விளையாடுவார். அதேபோல் 3-வது வீரராகவும், இந்தியாவுக்காக விக்கெட் வீழ்த்துபவராகவும், பினிஷராகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அல்லது அணி கேப்டன் அவரிடம் என்ன கேட்டாலும் அதற்கு ஏற்ப செயல்படுவார். இதுபோன்ற நபரைத்தான் ரோல் மாடலாக விரும்புவீர்கள்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »