Press "Enter" to skip to content

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதல் சோதனை: டாஸ் சுண்டுவதில் தாமதம்

சவுத்தாம்ப்டனில் மழை பெய்ததால் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆடுகளம் மூடப்பட்டிருக்கும் காட்சி

சவுத்தாம்ப்டனில் மழை பெய்ததால் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் நடைபெறவில்லை. அதன்பின் 117 நாட்களுக்குப் பின் இன்று இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு 3.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது.

டாஸ் சுண்டப்படுவதற்கு முன்னதாக மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தக் கூடாது, மகிழ்ச்சியை வெளிப்படுத்த கட்டிப்பிடிக்கக் கூடாது, ரசிகர்கள் அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுடன் நடைபெற இருக்கும் போட்டியை உலகமே பார்க்க ஆவலாக இருக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »