சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மண்டியிட்டு பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவர், இரண்டு நடுவர்கள் மேலும், பெஞ்ச் வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் என அனைவரும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு மண்டியிட்டு நின்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், இரண்டு அணி வீரர்களும் ‘Black Lives Matter’ லோகா பொறித்த டி-சர்ட் உடன் விளையாடுகின்றனர்.
முன்னதாக, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது.
ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனில் கொரோனா அச்சம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஜூன் 17-ந்தேதி மீண்டும் தொடங்கியது. இப்போட்டியின்போது வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அனைவரும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.
Related Tags :
Source: Maalaimalar