Press "Enter" to skip to content

பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்படும்: இங்கிலாந்து பயிற்சியாளர்

கடந்த 12 டெஸ்ட் இன்னிங்சில் அரைசதம் கூட ஜோஸ் பட்லருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அந்த அணியில் பேர்ஸ்டோவும் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் சேர்க்கப்படவில்லை. ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், 2-வது இன்னிங்சில் 9 ரன்களும் அடித்தார். கடைசியாக 12 டெஸ்ட் இன்னிங்சில் படலர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் 42 டெஸ்ட் போட்டிகளில் 31.46 சராசரியே வைத்துள்ளார். இதனால் பட்லர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்.

அவருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டுமா? என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு தொடரந்து வாய்ப்புகள்  வழங்கப்படும் என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சில்வர்வுட் கூறுகையில் ‘‘அவர் மீது இன்னும் நெருக்கடியை சுமத்தவில்லை. அது அவருக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க விரும்புகிறோம். 

போட்டிக்கான பயிற்சி, போட்டி மற்றும் எல்லாவற்றிலும் சிறப்பாகவே காணப்பட்டார். முதல் இன்னிங்சிலும் நல்ல நிலையில்தான் இருந்தார். அவர் இன்னும் கூடுதல் நேரம் களத்தில் இன்று மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும். இது அவருக்குத் தெரியும்.

அவர் நம்பிக்கையுடன் இருப்பதை எங்களால் உறுதி செய்து கொள்ள முடிகிறது. உண்மையிலேயே வெற்றிபெற அவருக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். மற்றவை எல்லாம், அவருக்கு ஒரு சிறந்த நாள் அமைந்து, அதிக ரன்கள் அடித்து. அதில் இருந்து அவர் செல்ல வேண்டும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வியாழக்கிழமை (ஜூலை 16-ந்தேதி) தொடங்குகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »