Press "Enter" to skip to content

ஐபிஎல் 2020 இறுதிப் போட்டி நவம்பர் 10-ந்தேதிக்கு தள்ளிப்போகிறது

ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ந்தேதிக்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

இந்தியாவில் மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

அணி நிர்வாகம், பங்குதாரர்கள், ஒளிபரபப்பு நிறுவனம் ஆகியவை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐபிஎல் நிர்வாகம் அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டியை 19-ல் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தது.

ஆனால் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தீபாவளி நவம்பர் 14-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் பண்டிகை வாரத்தை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. இதனால் தீபாவளிக்கு முந்தைய சில தினங்களுக்கு முன்பு வரை போட்டியை நடத்த வலியுறுத்தியது.

நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை. எப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும். தற்போது ஸ்டார் நிறுவனம் கேட்டுக்கொண்டதன்படி ஐபிஎல் போட்டியை இரண்டு நாட்கள் நீட்டிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் நவம்பர் 10-ந்தேதி செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10-ந்தேதி அதிகாரப்பூர்வமாக இறுதிப் போட்டி நடைபெறும் என்றால் முதன்முறையாக  ஞாயிற்றிக்கிழமை அல்லாத தினத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும்.

ஆகஸ்ட் 2-ந்தேதி நடைபெறும் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »