Press "Enter" to skip to content

பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்கக்கோரி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்

இனிமேல் விதிகளை மீற மாட்டேன் எனத் தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இவர் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) டெலிவிஷன் வர்ணனையாளர் குழுவில் இருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சஞ்சய் மஞ்ச் ரேக்கர் கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு அவர் நீக்கம் செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி அல்லது 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான் பி.சி.சி.ஐ. விதிப்படி நடந்து கொள்கிறேன். இனிமேல் ஒருபோதும் விதிகளை மீற மாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன். 

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் தொடர்பாக கங்குலி விரைவில் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »