Press "Enter" to skip to content

அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற ஆர்வம் – ஸ்ரேயாஸ் அய்யர்

ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

துபாய்:

இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் போட்டியிலும் எந்த ஒரு அணியும் தோல்வியை சந்திக்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது இல்லை.

இந்தநிலையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன். இதற்காக எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த பருவத்தில் கடுமையாக போராடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு நுழையாத ஒரே அணி டெல்லி ஆகும். இந்த சீசனிலாவது அந்த அணி அதை மாற்றிக்காட்டுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »