பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்க்கான தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. டென்னிஸ் தரவரிசையில் 198-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ராம்குமார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாமசைன்-ஐ (268-ம் தரவரிசை) எதிர்கொண்டார். இதில் ராம்குமார் 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
ஏற்கனவே சுமித் நகர் வெளியேறிய நிலையில், பிரஜ்னேஷ் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் விளையாட உள்ளார்.
ராம்குமார் கிராண்ட் ஸ்லாம் முதன்மை சுற்றுக்கு எப்பாடியாவது முன்னேறிவிடலாம் என போராடி வருகிறார். ஆனால் இதுவரை அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. 2018-ல் ஆஸ்திரேலிய ஒபனில் தகுதிச் சுற்றின் 3-வது சுற்றுவரை முன்னேறினார்.
Related Tags :
Source: Maalaimalar