Press "Enter" to skip to content

ஷாருக்கான், கேகேஆர்-ஐ வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகளால் ஒளிரிய புர்ஜ் கலிஃபா

மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வரவேற்கும் விதமாக புர்ஜ் கலிஃப் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

ஐபிஎல் 2020 பருவம் ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை ஐபிஎல் தொடர் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உள்ளார். அவரை வரவேற்கும் விதமாகவும், கொல்கத்தா அணி ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா, கொல்கத்தா அணியின் லோகோவையும், முக்கியமான வீரர்களின் படங்களையும் கட்டிடத்தில் ஒளிரவிட்டு சிறப்பித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »