Press "Enter" to skip to content

ஷார்ஜாவில் பொழிந்த சிக்சர் மழை: 33 முறை மைதானத்தை விட்டு அடிக்கடி வெளியே பறந்த பந்துகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷார்ஜா போட்டியில் இரு அணிகளும் 33 சிக்சர்கள் பறக்க விட்டனர்.

சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் சிக்சர்கள் பறந்தன. மொத்தம் 33 சிக்சர்கள் விளாசப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 சிக்சர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 சிக்சர்களும் அடித்தன. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் 9 சிக்சர்களும், சுமித், ஆர்ச்சர் தலா 4 சிக்சர்களும், சி.எஸ்.கே. அணியில் டு பிளிஸ்சிஸ் 7 சிக்சர்களும், வாட்சன் 4 சிக்சர்களும், டோனி 3 சிக்சரும், சாம் கர்ரன் 2 சிக்சர்களும் விளாசினர்.

ஆனால் ஆட்டத்தில் மொத்தம் 18 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. இரு அணிகளும் தலா 9 பவுண்டரிகள் அடித்தன. டோனி கடைசி சுற்றில் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை தாண்டி ரோட்டில் விழுந்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »