Press "Enter" to skip to content

நடுவரை விமர்சித்து விட்டு பின்வாங்கிய சாக்‌ஷி டோனி

டாம் கர்ரனுக்கு அவுட் கொடுத்துவிட்டு, பின் அந்த முடிவை திரும்ப பெற்றதால் எம்எஸ் டோனி மனைவி சாக்‌ஷி நடுவரை விமர்சனம் செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணி மட்டையாட்டம் செய்தபோது தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தில் டாம் கர்ரனின் பேட்டை பந்து உரசி சென்றதுபோல் இருந்தது. அதை கேட்ச் பிடித்த டோனி அப்பீல் செய்தார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார்.

ஆனாலும் அவர் டி.ஆர்.எஸ்.க்கு அப்பீல் செய்தார். ராஜஸ்தான் ஏற்கனவே அதற்கான வாய்ப்பை இழந்து விட்டதால் டாம் கர்ரன் பெவிலியனுக்கு திரும்ப வேண்டியது உறுதியானது. டி.ஆர்.எஸ். முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக டோனி நடுவருடன் விவாதித்தார்.

இதுதொடர்பாக டோனியின் மனைவி சாக்‌ஷி நடுவரை டுவிட்டரில் விமர்சித்து இருந்தார். ‘‘அவுட் என்றால் அவுட் கொடுங்கள். நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பினால் அதை சரியாக செய்யுங்கள்’’ என்று டுவிட்டரில் கூறி இருந்தார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அந்த டுவிட்டை சாக்‌ஷி டோனி நீக்கிவிட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »