Press "Enter" to skip to content

சிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக காயம் காரணமாக விளையாடாத அம்பதி ராயுடு இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 13-வது பருவம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது. அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால், நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் அம்பதி ராயுடு இடம் பெறவில்லை. அவருக்கு ஏற்பட்ட சிறிய காயத்தால் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே முரளி விஜய், ஷேன் வாட்சன் திணறி வரும் வரும் நிலையில் அம்பதி ராயுடு இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிற 25-ந்தேதி 3-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும், அக்டோபர் 2-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத அணியையும் எதிர்கொள்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »