Press "Enter" to skip to content

ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?: சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

மட்டையாட்டம்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வரும் நிலையில், சின்ன தல மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என டுவிட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இடம்பிடித்திருந்தார். இவரை சிஎஸ்கே அணியின் மட்டையாட்டம்கில் முதுகெலும்பு என்று சொன்னால் மிகையாகாது. மேலும் அவ்வப்போது பந்து வீசக்கூடியவர். சிறந்த பீல்டர்.

இவர் சிஎஸ்கே அணியுடன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். ஆனால் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைவதற்குள் சொந்த வேலைக்காரணமாக இந்தியா திரும்பினார். அவர் இந்தியா திரும்பியதும் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தற்போது சென்னை அணி மட்டையாட்டம்கில் சொதப்பி வருகிறது. அம்பதி ராயுடு, டு பிளிசிஸ் ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளனர். அம்பதி ராயுடன் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் ரெய்னாவை மீண்டும் அணிக்கு கொண்டு வர வேண்டும் என டுவிட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘நாங்கள் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அவராகத்தான் தொடரில் இருந்து வெளியேறினார். அவருடைய முடிவுக்கும், இடத்திற்கும் நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். நாங்கள் சுரேஷ் ரெய்னா பற்றி சிந்திக்கவில்லை.

இந்த தொடரில் மீண்டும் வலுவாக திரும்புவோம் என்பதை ரசிர்களுக்கு என்னால் உறுதியாக சொல்ல முடியும். இது விளையாட்டு. இதில் சிறந்த நாட்களும் இருக்கும். கெட்ட நாட்களுக்கும் இருக்கும். நாங்கள் நன்றாக விளையாடி மீண்டும் சிரிப்பை கொண்டு வர வேண்டியது அவசியம் என்பது ரசிகர்களுக்கு தெரியும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »