Press "Enter" to skip to content

சூப்பர் சுற்றில் இஷான் கி‌ஷனை களம் இறக்காதது ஏன்?- மும்பை கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

பெங்களூர் அணிக்கு எதிரான சூப்பர் சுற்றில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

துபாய்:

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் சுற்றில் மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

துபாயில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 201 ஓட்டத்தை குவித்தது.

டிவில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) படிக்கல் 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரோன்பிஞ்ச் 35 பந்தில் 52 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம்துபே 10 பந்தில் 27 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 2 மட்டையிலக்குடும், ராகுல் சாஹர் 1 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்சும் 20 ஓவர்களில் 5 மட்டையிலக்கு இழப்புக்கு 201 ஓட்டத்தை எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டையில் முடிந்தது.

இஷான் கி‌ஷன் 58 பந்தில் 99 ரன்னும் (2பவுண்டரி , 9சிக்சர்), போலார்ட் 24 பந்தில் 60 ரன்னும் (3பவுண்டரி, 5சிக்சர்) எடுத்தனர். உதனா 2 மட்டையிலக்குடும், வாஷிங்டன் சுந்தர், சாஹல், ஆடம் சம்பா தலா 1 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

ஆட்டம் டை ஆனதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் சுற்றில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 1 மட்டையிலக்கு இழப்புக்கு 7 ரன்னே எடுத்தது. பெங்களூர் அணி 8 ஓட்டத்தை இலக்கை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அந்த அணி மட்டையிலக்கு இழப்பின்றி 11 ஓட்டத்தில் எடுத்தது.

இந்த தொடரில் முடிந்த 2-வது சூப்பர் ஓவர் ஆகும். ஏற்கனவே டெல்லி அணி சூப்பர் சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது. பெங்களூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். மும்பை 2-வது தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

இந்த போட்டியின் இரு அணியிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இதில் டிவில்லியர்சின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. வெற்றி இரு அணிகளின் பக்கம் மாறிமாறி இருந்தது. கடைசியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதே நேரத்தில் இஷான் கி‌ஷனும், போலார்ட்டும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கி‌ஷன் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தார். அவர் நல்ல நிலையில் இல்லாததால் சூப்பர் சுற்றில் களம் இறக்கவில்லை.

சூப்பர் சுற்றில் போதுமான ஓட்டத்தில் எடுக்காததால் தோல்வியை தழுவினோம். இது ஒரு சிறந்த ஆட்டம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூர் அணி 4 -வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 3-ந்தேதி துபாயில் சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப்பை 1-ந்தேதி எதிர் கொள்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »