Press "Enter" to skip to content

ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

துபாயில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்தார்.

அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஆர்சர் வீசினார். முதல் பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார்.

அடுத்து வந்த ரகானே 2 ஓட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். 3-வது மட்டையிலக்குடுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 57 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 53 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது மட்டையிலக்குடுக்கு 85 ஓட்டங்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 ரன்களும், அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 161 ஓட்டங்கள் அடித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்சர் 4 சுற்றில் 19 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »