Press "Enter" to skip to content

ஆர்சிபி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு: பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள்

ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

ஆர்சிபி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆர்சிபி அணி:-

1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. வாஷிங்டன் சுந்தர், 6. ஷிவம் டுபே, 7. கிறிஸ் மோரிஸ், 8. இசுரு உடானா,  9. நவ்தீப் சைனி, 10. முகமது சிராஜ், 11. சாஹல்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-

1. கிறிஸ் கெய்ல், 2. கேஎல் ராகுல், 3. மயங்க் அகர்வால், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா, 7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. முகமது ஷமி, 10. பிஷ்னோய், 11. அர்ஷ்தீப் சிங். #IPL2020 #RCBvKXIP

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »