Press "Enter" to skip to content

2வது சூப்பர் சுற்றில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி

இரண்டாவது சூப்பர் சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.

துபாய்:

மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மட்டையாட்டம் தேர்வு செய்தது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

38 ரன்களுக்குள் மும்பை அணி 3 மட்டையிலக்குடுகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ஓட்டங்கள் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

பஞ்சாப் சார்பில் ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

அகர்வால் 11 ரன்னிலும், கிரிஸ் கெயில் 24 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார்.அவர் 77 ஓட்டத்தில் வெளியேறினார்.

அதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 மட்டையிலக்குடுக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணி சார்பில் பும்ரா, 3 மட்டையிலக்குடும், ராகுல் சஹர் மட்டையிலக்குடும் வீழ்த்தினர். 

இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார்.

முதல் பந்தில் ஒரு ஓட்டத்தை கிடைத்தது. 2வது பந்தில் பூரன் அவுட்டானார். 3வது பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்தில் ஒரு ரன்னும், 5வது பந்தில் 2 ரன்னும் கிடைத்தது. 6வது பந்தில் ரகுல் அவுட்டானார். சூப்பர் சுற்றில் பஞ்சாப் அணி 2 மட்டையிலக்குடுக்கு 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார்.

முதல் பந்தில் ஒரு ரன்னும்,2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் ஒரு ரன்னும் கிடைத்தது. 4வது பந்தில் ஓட்டத்தை இல்லை. 5வது பந்தில் ஒரு ஓட்டத்தை கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ஓட்டத்தை மட்டும் கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.

இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு மட்டையிலக்குடுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தது. 

அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »