Press "Enter" to skip to content

மோசமான மட்டையாட்டம் – ராஜஸ்தான் வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 20 சுற்றுகள் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 125 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அபுதாபி:

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ஓட்டத்தில் வெளியேறினா. அடுத்துவந்த வாட்சன் 3 பந்தில் 8 ஓட்டத்தை எடுத்த நிலையில் வெளியேறினார்.

25 பந்தில் 22 ஓட்டத்தை எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டனர். 

ஆனால்,  ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஸ்கோரை உயர்த்தமுடியவில்லை.

19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ரன்னிலும், 28 பந்துகளை சந்தித்த கேப்டன் டோனி 22 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 

இதனால், 20 சுற்றுகள் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

கடைசி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய ரவிந்திர ஜடேஜா 30 பந்துகளை சந்தித்து 35 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். 7 பந்துகளை சந்தித்த ஜாதவ் 4 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், தியாகி, கோபால், தேவாட்டியா தலா 1 மட்டையிலக்குடை வீழ்த்தினர். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்த அணி எடுத்த மிகக்குறைவான ஸ்கோர் இது ஆகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »