நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ஓட்டத்தை வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-
தொடக்க வீரராக களம் இறங்கிய விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. நம்ப முடியாத வகையில் அவர் அபாரமாக ஆடினார். மிடில் வாங்குதல் வரிசையில் வில்லியம்சன் ஆடுவதற்கு தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டார். இது மிகவும் கஷ்டமான முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருத்திமான் சாஹா இந்த ஆட்டத்தில் 45 பந்தில் 87 ஓட்டத்தை எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar