Press "Enter" to skip to content

நியூசிலாந்து அணியை விட நாங்கள் சிறப்பு: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

பாகிஸ்தான் அணி டி20 மற்றும் சோதனை போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து செல்லும் நிலையில், நாங்கள் சிறந்த அணி என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம்

பாகிஸ்தானின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி முதல் பயணமாக நியூசிலாந்து செல்கிறது. இரண்டு சோதனை மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

நியூசிலாந்து தொடர் குறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘எந்த எதிரணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் எங்களையும் நியூசிலாந்து அணியையும் ஒப்பிட்டு பார்த்தால் நாங்கள் சிறப்பாக விளையாடியுள்ளோம். எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் கிடையாது. நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »