ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பையை 1-0 என வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.
பனாஜி:
7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடர் மார்ச் மாதம் வரை நடக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது.
திலக் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், மும்பை சிட்டி அணியும் மோதின.
முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் ஒரு குவேஸி அப்பியா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், மும்பை சிட்டி அணியை 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar