Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் நடராஜன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி 20, 4 சோதனை போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்திய வீரர்களின் 14 நாள் கோரன்டைன் முடிவடைந்தது. யாருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை.

இதற்கிடையே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியோடு தொடரை தொடங்க வேண்டும் என இந்திய அணி விரும்பும். மட்டையாட்டம்கில் விராட் கோலி, தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர்.

சொந்த மண்ணில் பலத்தை காட்ட ஆஸ்திரேலியா துடிக்கும். இதனால் முதல் போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் தமிழக வீரர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என பிசிசிஐ நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ்தீப் சைனிக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஒருநாள் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »