Press "Enter" to skip to content

கடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. 2.2 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 மட்டையிலக்கு இழப்பிற்கு 25 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது அடைமழை (கனமழை) பெய்தது.

அதன்பின் போட்டி தொடங்க வாய்ப்பு இல்லாததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் நியூசிலாந்து 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »