சிட்னி சோதனை போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் ரோகித் சர்மா இணைந்திருப்பதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது சோதனை சிட்னியில் இந்திய நேரப்படி நாளை விடியற்காலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தொடக்க வீரராகத்தான் களம் இறங்குவார் என்பதை ரஹானே உறுதி செய்துள்ளார்.
மேலும் ரஹானே கூறுகையில் ‘‘முதலில், ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உயர்ந்த அளவிலான அவருடைய அனுபவம் முக்கியமானது. வலைப்பயிற்சியின்போது சிறப்பாக மட்டையாட்டம் செய்தார். அவர் 7 முதல் 8 செசன் பயிற்சி மேற்கொண்டார். 2-வது சோதனை முடிந்த பின்னர் மெல்போர்ன் வந்த ரோகித் பயிற்சியை தொடங்கினார்.
கடந்த சில தொடர்களில் தொடக்க வீரராக களம் இறங்கி ஓட்டங்கள் குவித்தார். ஆகவே, அவரை தொடக்க வீரராக நீங்கள் பார்க்கலாம்.
உமேஷ் யாதவ் எங்களின் முக்கிய பந்து வீச்சாளர். அவர் எங்களுக்காக சிறப்பாக பந்து வீசியுள்ளார். துரதிருஷ்டவசமாக அவர் காயம் அடைந்துள்ளார். அவரை உண்மையிலேயே தவறவிடுகிறோம். ஆனால் மற்ற பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. பும்ரா, அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்’’ என்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar