Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி சோதனைடில் இருந்து விஹாரி, பும்ரா விலகல் – இந்திய அணிக்கு சிக்கல்

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி சோதனை போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.

சிட்னி:

இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் நடந்த 3-வது சோதனை போட்டி டிராவில் முடிந்தது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் இறுதி சோதனை போட்டி பிரிஸ்பென் மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.  

இதற்கிடையில், சிட்னியில் நடந்த 3-வது சோதனை போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால், ஏற்கனவே ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் 4-வது சோதனை போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், 3-வது சோதனை போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் விலகியுள்ளனர்.

நேற்று மட்டையாட்டம் செய்தபோது விஹாரிக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல், பீல்டிங்கின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஹனுமா விஹாரி மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களும் பிரிஸ்பென்னில் நடைபெற உள்ள 4-வது சோதனை போட்டியில் இருந்து விலகியுள்ளனர். பும்ரா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக டி நடராஜன் களமிங்களாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »