Press "Enter" to skip to content

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நோவல் மலோசியாவின் செல்வதுரை கிசோனாவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-15, 21-15 என எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கொரோனா பாசிட்டிவ் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட சாய்னா நேவால், அதன்பிறகு கொரோனா பரிசோதனையில் கெட்ட என வர விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் சவுரப் வர்மாவை 21-12, 21-11 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

காஷ்யப் 3-வது சுற்றில் 8-14 என பின்தங்கிய நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கனடா வீரர் ஜேசன் அந்தோணி ஹோ-ஷுயே 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

காஷ்யப் முதல் சுற்றை 9-21 என இழந்திருந்தார். அதன்பின் 2-வது சுற்றை 21-13 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் இருந்து வெளியேறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »