Press "Enter" to skip to content

பாகிஸ்தான் மண்ணில் சோதனை போட்டி விளையாடுவேன் என நினைக்கவில்லை: டு பிளிசிஸ்

பாகிஸ்தானில் முதன்முறையாக சோதனை போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருப்பதாக தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் சோதனை கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி கராச்சியில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்கா அணியும் பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர். அந்த அணியில் ஏறக்குறைய அனைத்து வீரர்களுக்கும் இதுதான் முதல் பாகிஸ்தான் தொடராக இருக்கும்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டு பிளிஸ்சிஸ், இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தானில் சோதனை போட்டி நடைபெறும் என நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொடர் குறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் காலத்தில் சோதனை போட்டியை பாகிஸ்தான் மண்ணில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஒயிட்-பால் கிரிக்கெட் நடைபெறும் என்பது எனக்குத் தெதரியும், ஆனால், சோதனை போட்டி இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எனக்குத் தெரியாது.

நான் சோதனை போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 13 வருடத்திற்கு முன்பு இருந்தது போன்று ஆடுகளம் பிளாட்-ஆக இருக்கும். எங்களால் ஓட்டங்கள் குவிக்க இயலும் என நம்புகிறேன்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »