Press "Enter" to skip to content

இங்கிலாந்து தேர்வு குழு மீது வாகன் சாடல்

சோதனை அணி தேர்வு குறித்து இங்கிலாந்து தேர்வு குழு மீது முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டன்:

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு சோதனை போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அணித் தேர்வு சரியில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். 

இது குறித்து, ‘தற்போது இலங்கையில் நடக்கும் சோதனை தொடரில் இங்கிலாந்து அணியில் டாப்-3 வீரர்களில் ஒருவர் மட்டுமே அங்குள்ள சூழலை சமாளித்து நன்றாக விளையாடி வருகிறார். ஆனால் அந்த வீரருக்கு மட்டும் (பேர்ஸ்டோ), உள்ளூரில் வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுக்கு தேர்வு குழுவினர் ஓய்வு அளித்திருக்கிறார்கள். இது முட்டாள்தனமான முடிவு’ என்று வாகன் குறிப்பிட்டுள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »