Press "Enter" to skip to content

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்

முதல் இரண்டு சோதனை போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு சோதனை போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் சோதனை பிப்ரவரி 5-ம்தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் விளையாடியது. இரண்டு சோதனை போட்டிகளிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்பிறகு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்திய காலம் முடிவடைந்த பின்னர் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »