Press "Enter" to skip to content

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருதை அறிமுகம் செய்துள்ளது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களை கவுரவிக்க இந்த விருது எனத் தெரிவித்துள்ளது.

ஐசிசி ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சில வீரர்கள் ஒரு மாதத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அடுத்த மாதம் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இப்படிபட்ட நிலையில் ஐசிசி-யின் சிறந்த வீரர்கள் தேர்வு பட்டியலில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மாதந்தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை ரசிர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் இதுபோன்ற பிளேயர் ஆப் தி மன்த் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »