Press "Enter" to skip to content

ஒருநாள் போட்டி தரவரிசை: முதல் 2 இடங்களில் இந்திய அணி வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள மட்டையாட்டம் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இந்திய அணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி மட்டையாட்டம் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். கோலி 870 புள்ளிகளுடனும், ரோகித் சர்மா 842 புள்ளிகளுடனும் உள்ளனர்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 791 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர்களில் பும்ரா 3-வது நீடிக்கிறார். அவர் 700 புள்ளிகள் பெற்றுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த போல்ட் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முஜிபூர் ரகுமான் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »