Press "Enter" to skip to content

நாட்டில் நடக்கும் பிரச்சனை குறித்து பேசுவோம்: நாளை ரிஷப் பண்ட் களம் இறங்குவார்- விராட் கோலி

விளையாடும் நேரத்தில் நாட்டில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனை குறித்து நாங்கள் விவாதித்து, கருத்துக்களை கூறுவோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

நாளை போட்டி குறித்து, விவசாயிகள் போராட்டம் குறித்தும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருடன் நாங்கள் போட்டியை தொடங்க விரும்புகிறோம். ஐபிஎல் போட்டிக்குப்பின் கடுமையான பயிற்சி மூலம் சிறப்பாக வந்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தை பார்க்கும்போது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது நாட்டில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் பேசுவோம். இந்த பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுதியுள்ளனர். அணிகளுடனான ஆலோசனையில் இதுகுறித்து பேசினோம். அதன்பின் அணியின் திட்டம் குறித்து ஆலோசித்தோம்’’ என்றார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ‘‘அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர்’’ என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »