Press "Enter" to skip to content

சென்னை சோதனை போட்டியில் இருந்து அக்சர் பட்டேல் விலகல்

சென்னையில் இன்று தொடங்க உள்ள முதல் சோதனை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் விலகி உள்ளார்.

சென்னை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 சோதனை, ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் சோதனை தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது சோதனை போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

காலை 9.30 மணிக்கு  போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். நேற்றைய பயிற்சியின்போது இடது முழங்காலில் காயமடைந்ததால் அவர் முதல் போட்டியில் இருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஷாபாஸ் நதீம், ராகுல் சாகர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த சோதனை போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »