ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் 2-வது சோதனை போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 370 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த பாகிஸ்தான் முதல் பந்துவீச்சு சுற்றில் பாபர் அசாம் (77), பஹீம் அஷ்ரப் (78 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதங்களால் 272 ஓட்டங்கள் எடுத்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியின் (5 மட்டையிலக்கு) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 201 ஓட்டத்தில் சுருண்டது.
இதனால் பாகிஸ்தான் முதல் பந்துவீச்சு சுற்றில் 71 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் 2-வது பந்துவீச்சு சுற்றில் மட்டையாட்டம் செய்தது. தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரர் இம்ரான் பட் (0), அபித் அலி (13), அசார் அலி (33), பாபர் அசாம் (8), ஃபவாத் அலாம் (12), பஹீம் (29) முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 129 ரன்களே எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் 28 ரன்களுடனும், ஹசன் அலி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 200 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹசன் அலி 5 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாசிர் ஷா 23 ஓட்டத்தில் வெளியேறினார்.
ஆனால் முகமது ரிஸ்வான் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 115 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நௌமான் அலி 45 ஓட்டங்கள் எடுத்து ரிஸ்வானுக்கு உதவியாக இருக்க பாகிஸ்தான் 2-வது பந்துவீச்சு சுற்றில் 298 ஓட்டங்கள் குவித்தது. ஜார்ஜ் லிண்டே 5 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
முதல் பந்துவீச்சு சுற்றில் 71 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 370 ஓட்டங்கள் இலக்கா நிர்ணயித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar