Press "Enter" to skip to content

இந்தியா-இங்கிலாந்து 2-வது சோதனை போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளம் தயாரிப்பு?

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது சோதனை போட்டிக்கான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

சென்னை:

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தேர்வில் இங்கிலாந்து 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது சோதனை போட்டி இதே சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும். ஆல்-ரவுண்டரும், சுழற்பந்து வீச்சாளருமான அக் ஷர் பட்டேல் லேசான கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டதால் கடைசி நேரத்தில் முதலாவது தேர்வில் சேர்க்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் ரன்களை வாரி வழங்கினார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவரது பந்து வீச்சு இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே விமர்சித்தார். இதனால் இப்போது உடல்தகுதியை எட்டி பயிற்சியில் ஈடுபட்டு வரும் அக் ஷர் பட்டேல் 2-வது தேர்வில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தரும் பந்துவீச்சுகில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் முதல் பந்துவீச்சு சுற்றில் மட்டையாட்டம்கில் அசத்தியதால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. முதலாவது தேர்வில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்து வீச்சில் கையில் காயமடைந்த அஸ்வினுக்கு அந்த காயம் பயப்படும்படி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அணி நிர்வாகம் நிம்மதிபெருமூச்சு விட்டுள்ளது.

முதலாவது தேர்வில் தொடக்கத்தில் ஆடுகளம் மட்டையாட்டம்குக்கு சொர்க்கமாக திகழ்ந்தது. இதனால் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ஓட்டங்கள் குவித்து விட்டது. கடைசி இரு நாட்களில் தான் சுழற்பந்து வீச்சு எடுபட்டது. அதற்குள் இந்திய அணியின் கதையே முடிந்து போனது.

இந்த டெஸ்டுக்கு அருகில் உள்ள மற்றொரு ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. பந்து இன்னும் அதிகமாக சுழன்று திரும்பும் வகையில் புதிய ஆடுகளத்தின் தயாரிப்பு இருக்கும் என்று தெரிகிறது. அதாவது வரும் நாட்களில் ஆடுகளத்தில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால், அதன் பிறகு ஆடுகளம் வெயிலில் நன்கு காய்ந்து உலர்ந்து விடும். அவ்வாறான சூழலில் ஆடுகளத்தில் சீக்கிரமாக வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து எகிறத் தொடங்கி விடும். முதல் நாளில் இருந்தே ஓரளவு சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தால் அதன் பிறகு ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்காது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »