லாகூரில் நடபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை பரபரப்பான ஆட்டத்தில் 3 ஓட்டத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்றது. இதில் முதலில் மட்டையாட்டம் செய்த பாகிஸ்தான் மட்டையிலக்கு கீப்பர் ரிஸ்வான் சதம் (104 ரன், 64 பந்து, 6 பவுட்டரி 7 சிக்சர்) விளாச 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 169 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் 170 ஓட்டங்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான மாலன், ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாலன் 44 ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 6.5 சுற்றில் 53 ஓட்டங்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி சுற்றில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியால் 15 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 3 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 14-ந்தேதியும் நடக்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar