Press "Enter" to skip to content

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா, ஒசாகா கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, ஒசாகா கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள நமோமி ஒசாகா (ஜப்பான்)-14-ம் நிலை வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஜெர்மனி) மோதினார்கள்.

இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. முதல் செட்டை முகுருஜா 6-4 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதற்கு அடுத்த செட்டில் ஒசாகா சுதாரித்து ஆடி 6-4 என்ற கணக்கில் வென்றார்.

அதே உத்வேகத்துடன் விளையாடி 3-வது செட்டையும் அவர் 7-5 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 4-6, 6-4, 7-5.

முகுருஜா கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது 4-வது சுற்றோடு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

10-வது வரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் பெலாரசை சேர்ந்த சபலென்காவை எதிர்கொண்டார். இதில் செரீனா 6-4, 2-6, 6-4 என் செட் கணக்கில் வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் சூவி 6-4, 6-2 என்ற கணக்கில் வாண்டரஸ் சோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »