Press "Enter" to skip to content

சொந்த மண்ணில் அதிக வெற்றி: எம்.எஸ். டோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

சொந்த மண்ணில் கேப்டனாக அதிக வெற்றி என்ற சாதனைப் பட்டியலில் எம்எஸ் டோனியுடன் இணைந்துள்ளார் விராட் கோலி.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 482 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 164 ஓட்டத்தில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் பந்துவீச்சு சுற்றில் 5 மட்டையிலக்கு, 2-வது பந்துவீச்சு சுற்றில் சதம், 3 மட்டையிலக்கு வீழ்த்திய அஷ்வின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் பட்டியலில் எம்எஸ் டோனியுடன் இணைந்துள்ளார் விராட் கோலி. எம்எஸ் டோனி தலைமையில் இந்திய அணி இந்திய மண்ணில் 21 வெற்றிகள் பெற்றிருந்தது. தற்போது விராட் கோலி  அதை சமன் செய்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »