Press "Enter" to skip to content

சேப்பாக்கம் தேர்வில் அசத்தல்: ஐசிசி தரவரிசையில் ரோகித் சர்மா, அஷ்வின், பண்ட் முன்னேற்றம்

சேப்பாக்கம் 2-வது தேர்வில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அஷ்வின், ரிஷப் பண்ட் ஐசிசி சோதனை தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 161 ஓட்டங்கள் விளாசினார். அஷ்வின் 8 மட்டையிலக்கு வீழ்த்தியதுடன், சதம் அடித்தார். ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார்.

சதம் விளாசிய ரோகித் சர்மா 14-வது இடத்திற்கு முன்னேறினார். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அவரது சிறந்த இடம் இதுவாகும்.

சதம் அடித்த அஷ்வின் 14 இடங்கள் முன்னேறி 81-வது இடத்தில் உள்ளார். 8 மட்டையிலக்கு வீழ்த்தியதால் பந்து வீச்சு தரவரிசையில் 7-வது இடத்தில் நீடிக்கிறார். 33 புள்ளிகள் அதிகம் பெற்ற அஷ்வின் 6-வது இடத்தில் இருக்கும் ஸ்டூவர்ட் பிராட்டை விட 3 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

ரிஷப் பண்ட் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது அவரின் சிறந்த இடமாகும். முதல் இடத்தில் கேன் வில்லியம்சன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திலும், லாபஸ்சேன் 3-வது இடத்திலும், ஜோ ரூட் 4-வது இடத்திலும், விராட் கோலி  5-வது இடத்திலும் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »