Press "Enter" to skip to content

மகனுடன் குளியல் போடும் க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரனா ஹர்திக் பாண்ட்யா, தனது மகனுடன் குளியல் போடும் க்யூட் போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இங்கிலாந்து எதிரான நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். காயத்திற்கு பின் ஹர்திக் பாண்ட்யா இன்னும் முழுமையாக பந்து வீச்சில் ஈடுபடவில்லை.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா பட்டேல் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்கள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும், குடும்பத்தினருடன் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஹர்திக் பாண்ட்யா, அவரது மகனுடன் உல்லாசமாக குளியல் போடும் க்யூட் போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »