அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியம் மட்டையாட்டம்குக்கு சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஆமதாபாத்:
ஆமதாபாத் தேர்வில் 66 மற்றும் 25 ஓட்டங்கள் வீதம் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுழல் இன்றி நேராக வந்த பந்துகளில் தான் மட்டையிலக்குடை பறிகொடுத்தனர். ஒரு மட்டையாட்டம் குழுவாக நாங்கள் மட்டையாட்டம்கின் போது நிறைய தவறிழைத்து விட்டோம். முதல் பந்துவீச்சு சுற்றில் எங்களது மட்டையாட்டம் சரியில்லை. ஆடுகளத்தில் பயமுறுத்தும் அளவுக்கு பூதமோ, பூச்சாண்டியோ இல்லை. மட்டையாட்டம் செய்வதற்கு அருமையாக இருந்தது. நிலைத்து நின்று விட்டால் ஓட்டத்தை குவிக்கலாம் என்பதை பார்க்க முடிந்தது.
இது போன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது, மனஉறுதியும், ஓட்டத்தை எடுக்கும் முனைப்பும் அவசியமாகும். தொடர்ந்து தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டு கொண்டிருக்க முடியாது. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல, சீராக ஓட்டத்தை எடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதே சமயம் நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் தான் எனது அணுகுமுறை இருந்தது. தெளிவான மனநிலையில் விளையாட வேண்டும். ஸ்வீப் ஷாட்டில் ஆட்டம் இழந்த அந்த பந்துக்கு முன்பு வரை எனது திட்டமிடல் சரியாகவே இருந்தது.
எனவே ஆடுகளத்தை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. சொல்லப்போனால் இது வழக்கமான இந்திய ஆடுகளம் என்பதே எனது கருத்து. 2-வது சோதனை நடந்த சென்னை சேப்பாக்கத்தில் இதை விட பந்து அதிகமாக சுழன்று திரும்பியது. ஆனால் அங்கு நிறைய பேட்ஸ்மேன்கள் ஓட்டங்கள் எடுத்தனர். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இங்கு நாங்கள் நன்றாக மட்டையாட்டம் செய்யவில்லை என்பதே உண்மை.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar