Press "Enter" to skip to content

10 அணிகள் பங்கேற்கும் சென்னை மாவட்ட ஏ டிவி‌ஷன் கைப்பந்து லீக் நாளை தொடக்கம்

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஏ டிவி‌ஷன் கைப்பந்து லீக் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது.

சென்னை:

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘ஏ’ டிவி‌ஷன் கைப்பந்து லீக் சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது. மார்ச் 10-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.), 2-வது இடத்தை பிடித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சுங்க இலாகா, இந்தியன் வங்கி, வருமான வரி, தமிழ்நாடு காவல் துறை, ஐ.சி.எப், செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி, சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை சுற்று ராபின் முறையில் மோதவேண்டும். கடந்த முறை பி டிவி‌ஷனில் இருந்து வெற்றிபெற்ற சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப், 2-வது இடத்தை பிடித்த இந்தியன் வங்கி, தற்போது ஏ டிவி‌ஷனுக்கு முன்னேறி உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக சில போட்டிகளோடு ஆட்டம் கைவிடப்பட்டது. அந்த போட்டிதான் தற்போது நடத்தப்படுகிறது.

இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.3.5 லட்சம் ஆகும். மருத்துவர் ரேலா இன்ஸ்டிடியூட் மெடிக்கல் மையம் மற்றும் ஆச்சி குரூப் ஆப் நிறுவனம்கள் இந்த போட்டிக்கு ஸ்பான்சர் செய்கின்றன.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்ரபாண்டியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »