Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன் களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இதன் 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணைநோய்களுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் நாளில் பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது கட்டத்தின் 2-வது நாளான நேற்று மத்திய மந்திரிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »