பகர் ஜமான் தொடர் நாயகன் விருதை வெல்ல, பாபர் அசார் ஆட்ட நாயகன் விருதை பெற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான்.
தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் மட்டையாட்டம் செய்தது. இமாம் உல் ஹக் 57 ரன்களும், பகர் ஜமான் 101 ரன்களும் பாபர் அசாம் 94 ரன்களும் விளாச, இறுதி கட்டத்தில் ஹசன் அலி 11 பந்தில் 32 ஓட்டங்கள் அடிக்க பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 320 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் 321 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா மட்டையாட்டம் செய்தது. தொடக்க வீரர் ஜென்மன் மலான் 70 ஓட்டங்கள் அடித்தார். ஆனால் எய்டன் மார்கிராம் (18), ஸ்மட்ஸ் (17), டெம்பா பவுமா (20) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
வெரைன் 53 பந்தில் 62 ஓட்டங்கள் அடித்தால். பெலுக்வாயோ 61 பந்தில் 54 ஓட்டங்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டத்தில் வெளியே தென்ஆப்பிரிக்கா 49.3 சுற்றில் 292 ஓட்டங்கள் எடுத்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. இதனால் பாகிஸ்தான் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் அடுத்தடுத்து சதம் விளாசிய பகர் ஜமான் தொடர் நாயகன் விருதையும், பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar