Press "Enter" to skip to content

13 ஓட்டத்தை கொடுத்து 4 மட்டையிலக்கு வீழ்த்தினார் – தீபக் சாஹருக்கு டோனி பாராட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் விளையாடியதை நான் மிகவும் சிறப்பாக உணர்வதாக எம்எஸ் டோனி கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது.

மும்பையில் நடந்த 8 வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 106 ரன்னே எடுக்க முடிந்தது.

தமிழக வீரர் ஷாருக்கான் அதிகபட்சமாக 36 பந்தில் 47 ஓட்டத்தை ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டத்தில் ஆட்டம் இழந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் வேகப்பந்து வீரர் தீபக்சாஹர் அபாரமாக பந்து வீசினார். அவர் 13 ஓட்டத்தை கொடுத்து 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். சாம் கர்ரண், மொய்ன் அலி, பிராவோ தலா ஒரு மட்டையிலக்கு எடுத்தனர்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 26 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 107 ஓட்டத்தை இலக்கை எளிதில் எடுத்தது. அந்த அணி 15.4 ஓவர்களில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 107 ஓட்டங்கள் எடுத்து 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொய்ன் அலி 31 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), டுபிளசிஸ் 33 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். முகமது ‌ஷமி 2 மட்டையிலக்குடும், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் தலா ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்று இருந்தது.

இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறியதாவது:-

பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. தீபக் சாஹர் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த பவுலராக திகழ்ந்துள்ளார்.

அவரது பந்தில் டி.ஆர்.எஸ். கேட்குமாறு வலியுறுத்தினார். ஆனால் பந்து மேலே செல்வது தெளிவாக தெரிந்ததால் டி.ஆர்.எஸ்.கேட்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியில் விளையாடியதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இது ஒரு நீண்ட பயணம். 2008-ல் தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, துபாய் என பயணம் நீண்டது.

தற்போது மும்பை எங்களது சொந்த மைதானமாக இருக்கிறது. மும்பை எங்களது ஆடுகளமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்சின் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 19-ந் தேதி மும்பையில் எதிர்கொள்கிறது.

பஞ்சாப் அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப் அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 18-ந் தேதி (நாளை) எதிர்கொள்கிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »