ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் மட்டையாட்டம் செய்த மும்பை அணி 150 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
சென்னை:
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் மட்டையாட்டம் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. இந்நிலையில் ரோகித் சர்மா 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். குவிண்டன் டிகாக்(40) முஜீப் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய பொல்லார்ட், அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். 3 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் அடித்த பொல்லார்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர்களில் மும்பை அணி 5 மட்டையிலக்குடுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக குவிண்டன் டிகாக் 40 ஓட்டங்கள் அடித்தார். ஐதராபாத்தை பொறுத்தவரை முஜீப் 2 மட்டையிலக்கு, விஜய் சங்கர் 2 மட்டையிலக்கு, கலீல் அகமது 1 மட்டையிலக்குடை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 151 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar